ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 30 சனி

வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ? (யோபு.38:33) அண்டசராசரங்களையும் படைத்து ஆளுகை செய்துவரும் நமதாண்டவர்தாமே பாராளுமன்றத் தேர்தலிலும் எல்லா மாநிலங்களையும் தமது ஆளுகையின் கட்டுப்பாட்டிற்குள்ளே வைத்து தேவசித்தம் மாத்திரமே நிறைவேற உதவி செய்யுமாறு மன்றாடுவோம்.