ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 1 செவ்வாய்
உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார் (ஏசா.30:19).
கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது (புலம்.3:26) தேவனுடைய மகா பெரிய இரக்கத்தினாலே இப்புதிய மாதத்திற்குள் பிரவேசித்திருக்கிறோம். வானத்துக்கும் பூமிக்கும் தேவனாகிய கர்த்தரே நம்மைப் போதிக்கவும் நம்மை வழிநடத்தவும் நம்மை ஜீவபலியாக அவருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.