ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 1 வெள்ளி
கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் (சங்.30:9).
“..திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு” (2நாளா. 15:7) இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் நாம் மேற்கொள்ளும் கைகளின் பிரயாசங்களுக்கு நல்ல பலனை கர்த்தர் தந்தருளவும், தம்முடைய ஆவியினால் நம்மை வழிநடத்தவும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.