ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 1 ஞாயிறு
நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர். என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக (சங்.71:7,8).
உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர் (யோபு 5:24) நமது இரட்சகரும் பரிசுத்தருமாகிய கர்த்தர் இவ்வாண்டு முழுவதும் நம்மை விசாரித்து குறைவில்லாமல் நடத்திவந்திருக்கிறார். நன்றி நிறைந்த மனதோடு இந்த நாளின் ஆராதனையில் ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி கர்த்தரை ஆராதிப்போம்.