ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 28 ஞாயிறு
“.. நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம். .. தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரியஜாதி எது?” (உபா.4:7) என்ற வாக்கை எண்ணி நன்றி உணர்வோடு ஆராதனையில் பங்கெடுப்போம். திருசபைகள்தோறும் நடைபெறுகிற ஞாயிறு பள்ளிகளை தேவன் ஆசீர்வதிக்கவும் இதில் பங்குபெறுகிற ஒவ்வொரு குழந்தை யும் எதிர்காலத்தில் அவருக்கு சாட்சியாக விளங்கவும் மன்றாடுவோம்.