ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 16 ஞாயிறு

நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர் (சங்.99:5). இந்த பரிசுத்த ஓய்வு நாளில் பரிசுத்த அலங்காரத்துடனே நம் தேவனை ஆராதித்து துதிப்போம். சபைகளிலுள்ள ஞாயிறு பள்ளி, வாலிபர் ஐக்கியங்கள், பெண்கள் ஐக்கியம், சுவிசேஷ குழுக்கள் ஆகியவற்றின் வாயிலாக தேவன் சபைகளில் எழுப்புதலைக் கொண்டுவர மன்றாடுவோம்.