ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 30 புதன்
தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.136:16). இந்த மாதம் முழுவதும் நம்முடைய அனைத்து தேவைகளையும் சந்தித்து வழிநடத்தின தேவனைத் துதிப்போம். சத்திய வசன ஊழியத்தின் தேவைகளை சந்தித்து அவர் செய்த மகத்தான கிரியைகளுக்காகவும் அவரை ஸ்தோத்தரிப்போம்.
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக்.18:7). – இயேசு கிறிஸ்து