ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 11 வெள்ளி
“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்” (நீதி. 2:6). கர்த்தரை அறியும் அறிவினால் நம் பிள்ளைகள் நிரப்பப்படவும், தங்கள் பாடங்களைப் படிப்பதற்கு வேண்டிய ஞானத்தை, தேவ சமுகத்தில் பெற்றுக் கொள்ளவும் மேற்படிப்பிற்கு முயற்சிப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் இடங்கள் கிடைக்கவும் மன்றாடுவோம்.