ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 4 ஞாயிறு
அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள் (சங். 148:1). இந்த மனமகிழ்ச்சியின் நாளில் நம் தேவனை முழு இருதயத்தோடு, முழு பெலத்தோடும், அவரது பரிசுத்த சந்நிதியில் ஆராதிக்கவும், பரிசுத்த சிந்தையோடும் அவர் பந்தியில் பங்கு பெறவும் மன்றாடுவோம்.