ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 30 திங்கள்
அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் (1சாமு.12:24) இந்நாள் வரையிலும் கர்த்தர் நமக்கு எத்தனை நன்மைகளை அற்புதங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்து கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். புதிய மாதத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் அவருடைய கரத்திலே நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலி.4:6,7).