ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 31 வியாழன்
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே (சங்.103:2) ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கணப்பொழுதிலும் நம்மேல் கண்வைத்து நம்மைப் போதித்து அவருடைய வழிகளில் நம்மை நிலை நிறுத்திய கர்த்தருடைய கிருபைகளுக்காக நன்றி செலுத்தி, புதிய ஆண்டிற்குள் சமாதானத்தோடே பிரவேசிக்கச் செய்வதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.