ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 28 ஞாயிறு

இம்மாதத்தின் இறுதிநாளாகிய பரிசுத்த ஓய்வு நாள் ஆராதனையிலே கர்த்தர் செய்த எல்லா உபகாரங்களையும் நினைத்து இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம் (சங்.116:13). இம்மாதத்தில் நாம் ஏறெடுத்த எல்லா விண்ணப்பங்களின் சத்தத்துக்கு கர்த்தர் செவி கொடுத்தபடியாலும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரபலிகளை ஏறெடுப்போம்.


ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்.7:11) .