ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 28 ஞாயிறு
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் … என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள் (லூக்.19:38) ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசு வின் திருநாமம் உயர்த்தப்படவும், குருத்தோலை ஞாயிறை அனுசரிக்கும் இந்த நாளின் ஆராதனையும் பவனியும் கர்த்தருடைய பிள்ளைகளின் ஐக்கியத்தை பெலப்படுத்தத் தக்கதாக ஜெபிப்போம்.