ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 1 செவ்வாய்
அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர் (நெகே.9:28).
கர்த்தரின் நாமத்தினாலே இப்புதிய மாதத்திற்குள் கடந்துவர தேவன் கிருபை செய்திருக்கிறார். உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவார் (பிலி.1:5) என்ற வசனத்தின்படி நம்மை வழுவாமல் நடத்திச்செல்லும் ஆண்டவருடைய கரங்களைப் பிடித்துக்கொண்டு அவரது வழிகளில் நடக்க தேவகிருபைகளுக்காய் மன்றாடுவோம்.