ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 30 செவ்வாய்

கிறிஸ்துவே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே (ரோம.8:34) நமக்காக வேண்டுதல் செய்கிற பரிசுத்த ஆவியானவர் இம்மாதம் முழுவதும் நம்மோடிருந்து நமக்கு உதவி செய்தார். வேண்டிக்கொண்டதற்கும் அதிகமான நன்மையாலே நம்மை நிரப்பினபடியால் அவருக்கே எல்லா மகிமையையும் செலுத்தி ஜெபிப்போம்.


நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம் (1யோவா.5:15).