ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 1 புதன்
அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது (எபேசி.3:12).
தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது (1யோவா.4:9) புதிய மாதமாகிய வருடத்தின் இறுதி மாதத்திற்குள் பிரவேசிக்கச் செய்து நம்மை இவ்வளவாய் நேசித்த கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். நம்முடைய கைகளின் பிரயாசங்களையும் கர்த்தரே ஆசீர்வதிக்க நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.