ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 30 ஞாயிறு
அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி அவரைக் கீர்த்தனம் பண்ணு வேன் (சங்.27:6) இன்றைய ஆராதனை நாளிலும் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணவும், அவருடைய சமுகத்தில் மனமகிழ்ச்சியோடு தங்கியிருக்கவும் நம்மைத் தெரிந்துகொண்ட தேவாதி தேவனுக்கே மகிமையைச் செலுத்தி துதித்து ஜெபிப்போம்.