ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 13 ஞாயிறு
கர்த்தாவே, பரிசுத்தமானது நித்திய நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது (சங்.93:5) பரிசுத்தக் குலைச்சலான காரியங்கள் கர்த்தருடைய ஆலயத்திலே காணப்படாதபடி ஆராதிக்கக்கூடும் கர்த்தருடைய பிள்ளைகள் தங்கள் சிந்தை செயல் எல்லாவற்றிலும் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள சாட்சியுள்ள ஆராதனையை நடத்த வேண்டுதல் செய்வோம்.