ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 28 திங்கள்
இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக (சங்.68:35) இம்மாதம் முழுவதும் நம்முடைய வேண்டுதலின் சத்தத்துக்கு கர்த்தர் செவிசாய்த்தபடியால் அவருக்கு நன்றியறிதலான ஸ்தோத்திரங்களைச் செலுத்தி அவரை மகிமைப்படுத்தி உயர்த்துவோம். ஆமென்.
பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம் (1 யோவான் 3:21-22).