ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 24 வியாழன்

உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும் (சங்.69:16) இரக்கங்களின் பிதாதாமே பங்காளர்கள், நேயர்கள் குடும்பங்களில் குழந்தைக்காக காத்திருக்கும் குடும்பங்கள்மேல் கடாட்சம் வைத்து அவர்களை நினைத்தருளவும் குழந்தைச் செல்வத்தை அருளி குடும்பங்களில் கர்த்தரின் மகிழ்ச்சி காணப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.