ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 20 ஞாயிறு

சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும் (ஏசாயா 2:3) இந்த பரிசுத்த ஆராதனை நாளில் மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஆராதனை செய்து அவரை மகிமைப்படுத்துவோம். கர்த்தரின் வசனம் வெளிப்படும்போது ஆராதனைகளை தடை பண்ணுகிற அந்தகார வல்லமையின் கூர் முறிக்கப்பட்டு கர்த்தரின் பரிசுத்தம் விளங்க வேண்டுதல் செய்வோம்.