ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 9 சனி

தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார் (சங்.107:28) கடன் பாரத்தால் பலவித நெருக்கங்களோடு வாழ்ந்துகொண்டு இருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளை அவர்களது இக்கட்டுகளுக்கு நீங்கலாக்கி கர்த்தர் விடுவித்து, இனி கடனில்லாத சமாதானமான வாழ்க்கை நடத்த வேண்டிய ஞானத்தைத் தந்தருளும்படி வேண்டுதல் செய்வோம்.