ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 30 வியாழன்

நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன் (சங்.146:2) இம்மாதம் முழுவதும் நம்மை அற்புதமாய் பாதுகாத்து, சத்துருவின் முகத்துக்கு நம்மை விலக்கி வேண்டிக்கொண்டதற்கும் அதிகமான நன்மைகளை அருளின தேவாதி தேவனை முழு உள்ளத்தோடு துதித்து ஸ்தோத்திரிப்போம்.


பின்பு, இயேசு சீஷர்களிடத்தில் வந்து, …. நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார் (மத். 26:40-41).