ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 30 புதன்

நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன் (சங்.59:16) இம்மாதம் முழுவதும் நமது கண்ணை கண்ணீருக்கும், காலை இடறுதலுக்கும் தப்புவித்து நடத்திவந்த கர்த்தருடைய கிருபைகளையும் வல்லமைகளையும் மகிழ்ச்சியோடு புகழ்ந்து ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். … நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன் (யோவான் 14:1,13).