ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 13 ஞாயிறு
என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன் (ஏசாயா 60:7) பரிசுத்தமுள்ள ஆண்டவரை தொழுதுகொள்ளும்படியாக அவருடைய மகிமையின் ஆலயத்திற்குள் பிரவேசித் திருக்கிற நாம் மனமகிழ்ச்சியோடும் பரிசுத்தமுள்ள உள்ளத்தோடும் கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்தி ஆராதிப்போம். இந்தநாளில் குறிப்பாக வட இந்தியாவில் உள்ள எல்லா ஆலய ஆராதனைகளின் பாதுகாப்புக்காக ஜெபிப்போம்.