ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 28 செவ்வாய்

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் (சங்.23:6) இம்மாதம் முழுவதும் தமது உள்ளங்கையில் நம்மை செதுக்கி பாதுகாத்து போஷித்த தேவன் இனியும் கைவிடாதிருப்பார், நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் என்ற விசுவாச அறிக்கைகளை அறிக்கையிட்டு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தி ஜெபிப்போம்.

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (ரோமர் 8:26).