ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 29 சனி
எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது (சங்.123:2) பற்பல வியாகுலங்களினாலும், இருதய பாரத்தாலும், மன கலக்கத்தினாலும் சோர்ந்துபோயுள்ள ஒவ்வொருவரையும் தயையுள்ள கர்த்தர் கண்ணோக்கிப் பார்த்து இரக்கம் செய்திடவும், அவர்களுக்கு வேண்டிய மனநிறைவையும், மனஅமைதியையும் தந்தருளவும் ஜெபிப்போம்.