ஜெபக்குறிப்பு: 2023 மே 2 செவ்வாய்

கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது (ஏசா.61:10) கடந்த மாதங்களில் தேவன் தமது பலத்த கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் நம்மை வழிநடத்தி, எதிராய் வந்த எல்லா சத்துருவின் போராட்டங்கள், சுக வீனங்கள், ஆபத்துகளிலிருந்து காத்து இரட்சித்தபடியால் துதி ஸ்தோத்திர பலிகளை ஏறெடுப்போம்.