ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 24 ஞாயிறு
கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக (மாற்கு 11:10) குருத்தோலை ஞாயிறு ஆராதனைகள் எங்கும் பாதுகாப்போடும் சிறப்போடும் ஆசரிக்கப்படுவதற்கு கர்த்தர்தாமே அனுக்கிரகம் செய்தருளவும், எல்லா திருச்சபைகளின் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், போதகர்கள், ஊழியர்கள் அனைவரின் போக்குவரவு மற்றும் நல்ல சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.