ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 30 ஞாயிறு
மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது (1நாளா.16:27) இன்றுவரை நம்மை சுகத்தோடு பாதுகாத்து வந்த தூயாதி தூயவரை துதித்து ஆராதிக்க கர்த்தர் தந்த ஆராதனை நாளுக்காக நன்றி செலுத்துவோம். இன்று ஆலயத்திற்கு வரமுடியாமல் முடங்கிப்போயுள்ள மக்களுக்காகவும் மருத்துவமனையில் உள்ளவர்களுக்காகவும் ஜெபிப்போம்.