வாசகர்கள் பேசுகிறார்கள்
(ஜனவரி-பிப்ரவரி 2015)
1. ஜூலை – ஆகஸ்டு மாத தியானபுத்தகத்தில் ஜூலை மாதத்தின் தியானங்கள் ஆதியாகமத்திலிருந்து எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளின் தியானங்களும் உண்மையிலேயே எனது ஆவிக்குரிய வாழ்விற்கு பெரும் உதவியாக இருந்தது. தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளுக்காக ஜெபிக்கிறேன்.
Mr.Xavier, Chennai.
2. அனுதினமும் கிறிஸ்துவுடன் தவறாமல் கிடைக்கப்பெற்றேன். ஜூலை மாதத்தில் ஆதியாகமம் புத்தகத்தின் பகுதிகளை எடுத்து ஒவ்வொரு நாளும் வாசித்து ஆவிக்குரிய மன்னாவை பெற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. மேலும் ஆகஸ்டு மாதத்தில் யோனா தீர்க்கதரிசியின் புத்தகத்திலிருந்து சத்தியங்களை அறிந்து கர்த்தரைத் துதித்தேன். ஞாயிறு பிற்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் டிவி நிகழ்ச்சியையும் திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியையும் பார்க்க ஆவலோடு காத்திருப்பேன்.
Mr.Arul Jeganathan, Thiruppathur.
3. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தை தினமும் வாசித்து ஆசீர்வாதத்தைப் பெற்று கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.
Mrs. Leelabai, Madurai.
4. சத்தியவசனம் இருமாத இதழ் தவறாமல் கிடைக்கிறது. நான் இதை ஒவ்வொருநாளும் மிகுந்த அக்கறையுடன் படித்து அதில் இருக்கும் முக்கியமான வசனங்களையும் குறிப்புகளையும் எழுதி வைத்து வருகிறேன். புத்தகவெளியீடு மேன்மேலும் வளரவும் ஜெபிக்கிறேன். இந்தமாதம் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதிய தியானங்கள் மறக்க முடியாதவை.
Mrs.Lalitha, Arakkonam.
5. Greetings in Jesus Name. I am regularly receiving your monthly Magazine, Anuthinamum Christhuvadan Tamil in time and praise God for that. From the bottom of my heart, I thank you personally for that Magazine. It is very useful to my spiritual life. We are daily remembering you, your family and also the ministry in our prayers. May God bless you.
Mr.S. Mathews, Vellore.
6. அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை வேதாகமத்தை ஒழுங்கும் கிரமமுமாக வாசிக்க உதவியாயிருப்பதை நினைத்து ஆண்டவரைத் துதிக்கிறேன். ஜூலை மாதத் தியானத்தில் அர்த்தமும் அந்த தியானமும் மிக ஆசீர்வாதமாகவும், வேதாகமத்தை இன்னும் அதிகமாக வாசிக்கவும் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளருவதற்கு பிரயோஜனமாகவும் இருந்தது. எழுதிய தேவபிள்ளைகளுக்கு நன்றி. என்னுடைய சகோதரர் ஒருவருக்கும் இதை அறிமுகப்படுத்தியுள்ளேன்.
Mrs.E. Jeyaseeli Edward, Vadipatti.