வாசகர்கள் பேசுகிறார்கள்

(நவம்பர்-டிசம்பர் 2016)

1. ஐயா, உங்களுடைய சத்தியவசனம் புத்தகம் படித்தேன். மனசுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கு. தேவனுடைய சத்தியத்தை அறிந்துகொள்ளவும் உதவியா இருக்கு. எனக்கு தவறாமல் இப்புத்தகத்தை அனுப்பவும். இப்புத்தகங்கள் நாங்கள் தேவனிடம் கிட்டி சேர உதவியாக இருக்கும்.

Mrs.Radha, Trichy

2. Greetings. The Meditations for July had been written by Bro.Dharma Kulasingam. His writing is lively and thought provoking. You may give more chances for writing Meditations.

Mr.G.Wilson, Nagercoil.

3. சத்தியவசனம் வெளியிட்டுள்ள விருத்தாப்பியம் என்ற நூல் எனக்கு பரிசளிக்கப்பட்டது. நான் பணி ஓய்வு பெற்று தனிமையிலிருப்பவள். இந்த புத்தகத்தில் என்ன இருக்கப்போகிறது என்று அலட்சியமாக ‘விருத்தாப்பியம்’ நூலை வாசிக்கத் துவங்கினேன். … என்னைப் போன்ற வயது முதிர்ந்தவர்களுக்கு சகோதரி அநேக பயனுள்ள ஆலோசனைகளை கூறியுள்ளார். முதுமையை எப்படி பலன் தரும்படி பயன்படுத்தலாம் என்றும், கர்த்தர் நமக்கு ஈவாக கொடுத்துள்ள வாழ்க்கையை எப்படி அவருக்கு கனி தரும் வாழ்க்கையாக மாற்றலாம் என்றும் யோசனை அளித்துள்ளார். வாழ்க்கையில் தனிமையில் சோர்ந்துபோயிருந்த எனக்கு இந்த புத்தகத்தை வாசித்ததில் நல்ல ஒரு ‘டானிக்’ அருந்தியது போல் பெலன் கிடைத்துள்ளது. சகோதரி சாந்தி பொன்னு அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

Mrs.P.Jeyaseeli, Madurai.

4. கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள சகோதரருக்கு, நான் ‘அனுதினமும் கிறிஸ்துவுடன்’ புத்தகத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன். சென்ற மாதம் என் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். செப்.8ஆம் தேதி தியானம் எனக்கு மிகவும் பிரயோஜனமாயிருந்தது. அன்றைய நாளின் அப்.27:22ஆம் வசனம் எனக்கு ஒரு தைரியத்தைத் தந்தது. அந்த வசனத்தை வைத்து நான் ஜெபித்து வந்தேன். கர்த்தர் என் அம்மாவை சுகப்படுத்தி வீடு வர உதவி செய்தார். கர்த்தரின் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. ஆமென்.

Mr.Kishore, Bangalore.