வாசகர்கள் பேசுகிறார்கள்
(ஜனவரி-பிப்ரவரி 2017)
1. உங்கள் வானொலி நிகழ்ச்சிகளையும், மற்றும் TV நிகழ்ச்சிகளையும் நாங்கள் தவறாமல் கேட்டு வருகிறோம். நல்ல ஆவிக்குரிய சத்தியங்களை பலவித தலைப்புகளில் ஊழியர்கள் சத்தியத்தை விளக்கி வருகிறதை கேட்டு தேவ ஆசீர்வாதம் பெற்று வருகிறோம் இன்னும் சத்தியத்தை அறிந்து கொள்ள வாஞ்சிக்கிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற தியானபுத்தகத்தை அனுப்பித்தரும்படி கேட்டுக்கொள்கிறோம் இது எங்கள் அன்றாட வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டிய சத்தியங்களை அறிந்துகொள்ள எங்களுக்கு பயன்படுகிறதாக இருக்கும்.
Mr.V.Rajamanickam, Kallaikurichi
2. அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற புத்தகத்தை சமீபத்தில் படிக்க தேவன் எனக்கு கிருபை செய்தார். அதில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தங்களும் விளக்கவுரைகளும் படிக்கும்போது எனது ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனுக்கென்று எழுந்து பிரகாசிக்க, மற்றவர்களுக்கு இயேசுவின் அன்பைப்பற்றி சொல்ல, தேவனுடைய வார்த்தைகள் தெளிவாகவும், எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கிறது.
K.Murugan Manoharan, Tuticorin
3. நான் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் வயது 80, 36 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறேன். நான் அதிகமாக விரும்பி படிக்கும் அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை என் பிள்ளைகள் குடும்பத்திற்கும் மற்றும் அநேகருக்கும் அறிமுகம் செய்திருக்கிறேன். என் ஆவிக்குரிய வாழ்வு வளர உங்கள் தியானங்கள் சாந்திபொன்னு அவர்கள் எழுதும் தியானங்கள் பயனுள்ளதாயிருக்கிறது. ‘விருத்தாப்பியம்’ புத்தகம் மிகவும் பயனுள்ளதாகவும் சமாதானம் அளிப்பதாகவும் உள்ளது.
Mrs.Mercy Sathianathan Neyveli
4. அனுதினமும் கிறிஸ்துவுடன் செப்-அக்2016ன் “துதிஜெப விண்ணப்பம்”-(அக்.2016) 1.10.2016 முதல் நாளில் இருளை வெளிச்சமாக்கி அக்-16 மாதம் முழுவதும் வெளிச்சத்தில் கடந்து வர தேவன்தாமே வல்லவராக இருந்து வந்ததற்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். மாதத்தின் ஒவ்வொரு நாளும் துதி ஜெப விண்ணப்பம் காலை நேரத்தில் வேதவசனத்துடன் சார்ந்து ஜெபித்து வருவதனால் வாக்குத்தத்தின் கர்த்தர் தாமே வாக்கு மாறாமல் எங்கள் துதி ஜெப விண்ணப்பத்திற்கு பதில் அளித்துவருகிறார். இப்பகுதி எங்களின் ஜெப வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜமாக இருந்து வழி நடத்துகிறது.
Mr.M.J.Edwin, Chennai