வாசகர்கள் பேசுகிறார்கள்
(மார்ச்-ஏப்ரல் 2020)
[01]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, தங்களின் சத்திய வசனப் புத்தகம் மிகுந்த ஆறுதலைத் தருகிறது, எனக்கு பத்திக்கை அனுப்புங்கள். அடுத்த மாத முதல் சந்தா அனுப்புகிறேன்.
Sis.Mary Jeba, Madurai.
[02]
Dear Brother in Christ, Thank you all for sending so systematically, the magazines and your faithful prayers to win us all for his kingdom. Dr.Pushparaj message on the sathiyavasanam TV recently about observing the holy communion was a real teaching. We can only thank God for this beautiful sathiyavasanam ministry .
Mrs.Usha Prasad, Bangalore.
[03]
சத்திய வசன வானொலி நிகழ்ச்சி கேட்டேன். தெளிவாக இருந்தது. டாக்டர் தியோடர் வில்லியம் அவர்களின் வேத ஆராய்ச்சி ஆசீர்வாதமாக இருந்தது நன்றி.
Mr.Chidambaram, Bangalore.
[04]
அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் நவம்பர் 25ந்தேதி திங்கள் தியானப் பகுதி “பாடுகளும் பயன்களும்” என்ற தலைப்பில் வந்த செய்திகள் மிகவும் (அருமையாகவும்) நன்றாக இருந்தது.
Bro.Mathankumar, Kallidaikurichi.
[05]
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையால் கடந்த நவம்பர் 12ம் தேதி என்னுடைய 80வயது கடந்து 81ம் ஆண்டுக்குள் நடத்துகின்ற என் தேவனுக்கு நன்றி செலுத்துகின்றேன். நம்முடைய குடும்ப கூடுகையில் கலந்துகொள்ள தேவன் கிருபை செய்தார். நிகழ்ச்சிகள் யாவும் நன்றாக இருந்தது. ஆத்துமாவுக்கும் சரீரத்திற்கும் நல்ல உணவும் உற்சாகமும் கொடுத்தது. உங்கள் ஊழியரின் கனிவான கவனிப்பிற்கும் மிக்க நன்றி.
Mr.Richard Sam Alex, Chennai.
[06]
எனக்கு இப்போது வயது 82. உடல் பலவீனத்தாலும் கண்பார்வை குறைவினாலும் வெளியீடுகளை சரியாக வாசிக்க முடியவில்லை. என் ஆவிக்குரிய வாழ்வில் எத்தனையோ ஆண்டுகள் அடைந்த ஆசீர்வாதங்களை இப்போது பெற முடியவில்லையே என்று வேதனை அடைகிறேன். என்னால் முடிந்தவரை வாசித்துவிட்டு எங்கள் சபையில் உள்ள எனது மாணவியிடம் கொடுத்து விடுகிறேன். அவர்கள் மூலம் அநேகர் ஆசீர்வாதம் பெறுகிறார்கள் என்று நம்பி சந்தோஷம் அடைகிறேன்.
Mrs.Sheela Samuel, Chennai.
[07]
அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் ஜுன் மாத தியான பகுதியில் “பேச்சைக் காத்துக்கொள்” என்ற தலைப்பில் நம்முடைய ஜெபங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டிருந்தது. கவர்ச்சியான நீண்ட ஜெபங்கள் அல்ல, சிறிதானாலும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஏறெடுக்கும் ஒரு சிறு ஜெபத்தில் தேவன் பிரியப்படுகிறார், என்று கூறப்பட்டிருந்தது. நன்றி.
Mrs.Gnanamani Hepzibah, Vellenlanvilai.