ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 1 வியாழன்

எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி … விழித்திருங்கள் (எபேசி.6:18).


கர்த்தாவே, நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும் (சங்.31:2) இம் மட்டும் நம்மை பாதுகாத்து தப்புவித்த தேவன் இப்புதிய மாதத்திலும் நமக்கு பலத்த துருகமாக, அடைக்கலமான அரணுமாக இருந்து எல்லா துர்ச்சன பிரவாகங்களுக்கும் விலக்கி நம்மை வழிநடத்த ஒப்புவித்து ஜெபிப்போம்.