வாசகர்கள் பேசுகிறார்கள்
(செப்டம்பர்-அக்டோபர் 2021)
[01]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 11.8.2021 அன்று சத்தியவசன Zoom Meeting இல் கலந்துகொண்டோம். பாடல்கள், சாட்சிகள், தேவசெய்தி அருமையாகவும் எங்களுக்கு ஆசீர்வாதமாகவும் இருந்தது. கர்த்தரைத் துதிக்கிறோம்.
Mr.V.Thangaraja, Vellore.
[02]
இம்மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற சத்தியவசன Zoom Meeting இன் ஜெபக் கூடுகையில் நாங்களும் பங்கு பெற தேவன் கிருபை செய்தார். எங்கள் குடும்பத்திற்கு ஆசீர்வாதமாக இருந்தது. சிறப்பாக இக்கூட்டத்தை ஒருங்கிணைத்த சகோதரருக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்கிறோம். தொடர்ந்து ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.
Mr.Gopi, Watrap.
[03]
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் சத்தியவசனம் தொலைகாட்சியை தவ றாமல் பார்த்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுகிறோம். ‘சத்தியவசனம்’ பத்திரிக்கையில் கட்டுரைகளை எழுதும் அனைவருக்காகவும் சகோதரி சாந்தி பொன்னு அவர்களுக்காகவும் உங்கள் ஊழியங்களுக்காகவும் ஜெபித்து வருகிறோம்.
Mrs.Menaka George, Coimbatore.
[04]
அனுதினமும் கிறிஸ்துவுடன் தினசரி வேதவாசிப்பு பயனுள்ளதும், நல்ல விளக்கங்கள் உள்ளதுமாக பயன்தருகிறது. எனக்கு வயது 85, ஓய்வு பெற்ற ஆசிரியர். தினமும் வாசித்து நன்மையைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.
Mrs.Eben Duraisamy, Palayamkottai.
[05]
Praise God for Sister Shanthi ponnu. The Mighty hand of our God is upon her and we are thriving day by day in spiritual maturity by the word of God through her daily devotions. I thank God for her life. Be assured of my prayers.
Mrs.Vasugi Celin, Arni.
[06]
சத்தியவசன ஆசிரியர் அவர்களுக்கு, ஞாயிற்றுகிழமை பகல் 12.30 மணிக்கு நம்பிக்கை டிவியில் சத்தியவசன நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறோம். சகோ.சுவி பிரபாகரதாஸ் அவர்களின் செய்தி எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது. இதன் மூலம் வேதத்தை ஆராயமுடிகிறது. மிக்க நன்றி.
Mr.J.Vincent, Nagercoil.
[07]
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். சகோதரி சாந்தி பொன்னு அவர்களின் இந்த வல்லமையான எழுத்துப்பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். கர்த்தர்தாமே அவர்களின் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக.
Mr.Johnson Ebezenzer, Madurai.
[08]
அன்பார்ந்த சத்தியவசன ஊழியர்களுக்கு, கொடிய கொள்ளைநோய் காலத்திலும் கர்த்தர் எங்களை பாதுகாப்பாக வைத்துள்ளார். பெருந்தொற்றின் நாட்களிலும் உங்களையும் கர்த்தர் பாதுகாத்து ஊழியம் சிறப்பாக நடைபெற உதவி செய்திருக்கிறார். தங்களது ஆவிக்குரிய வெளியீடுகள் எங்களுக்கு ஆறுதலாக இருந்து வருகிறது.
Mr.Sam N.Gunalan, Erode.