ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 1 புதன்
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக (நெகேமி. 1:11).
விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார் (2கொரி.9:10) இவ்வாக்கின்படியே புதிய மாதத்தில் நம்முடைய குடும்பத்தை, ஊழியங்களை, தேசத்தை கர்த்தர் விசாரித்து போஷித்து வழி நடத்த ஜெபிப்போம்.