ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 1 செவ்வாய்
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார் (சங்.145:18).
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார் (சங்.29:11) என்ற வாக்கின்படி இப்புதிய மாதத்தை கர்த்தர் ஆசீர்வதித்து குறைவுகளை நிறைவாக்கி, தம்முடைய ஜனத்திற்கு பெலன், சமாதானத்தை சம்பூரணமாய் அருளிச்செய்திட வேண்டுதல் செய்வாம்.