ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 1 வெள்ளி

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1பேதுரு 5:7).


நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் (ஆதி.15:1) என்ற வாக்குப்பண்ணின ஆண்டவர் இம்மட்டும் நடத்தினார். இப்புதிய மாதத்திலும் நம்மோடுகூட இருந்து எல்லாத் தீமையினின்றும் நம்மை விலக்கி இரட்சித்து பாதுகாத்து வழிநடத்த அர்ப்பணித்து ஜெபிப்போம்.