ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 30 சனி
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை (புலம்.3:22) இம்மாதம் முழுவதும் நம்முடைய பெலனாகிய கர்த்தர் நம்மோடி ருந்து நம்மைப் பெலப்படுத்தி, தமது இரக்கத்தினாலும் கிருபையினாலும் நம்மை தாங்கி நடத்தி வந்திருக்கிறார். முழு உள்ளத்தோடும் முழுப் பெலத்தோடும் கர்த்தரை மகிமைப்படுத்தி ஸ்தோத்திரிப்போம்.
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் (ரோமர் 12:11-13).