ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 17 ஞாயிறு

மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை (ரோம.6:9) ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்த மகிமையான இந்நாளை பண்டிகை நாளாக அனுசரிக்கிற அனைத்துலக திருச்சபைகளுக்காகவும், ஆராதனையில் உயிர்த்தெழுந்த ஆண்டவரின் வல்லமையை விசுவாசிகள் உணர்ந்து தேவனை மகிமைப்படுத்த ஜெபிப்போம்.