ஜெபக்குறிப்பு: 2022 மே 20 வெள்ளி
நாம் எல்லா பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு… (1தீமோ.2:2) நம்முடைய தேசபிரதமர், ஆளுநர், அதிகாரத்திலுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படவும், நாட்டு மக்களுடைய நலன், நாட்டை முன் னேற்றத்தின் பாதையில் கொண்டு செல்வதற்கு நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறவர்களாக காணப்படுவதற்கு மன்றாடுவோம்.