ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 31 ஞாயிறு

இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம் (1நாளா.29:13) மாதத்தின் இறுதிநாளில் கர்த்தரை ஆராதிக்க கூடிவந்த நாம் இந்தமாதம் முழுவதும் கர்த்தர் நமக்கு செய்த எண்ணில்லாத நன்மைகளை நினைத்து நம்முடைய இருதயத்திலிருந்து ஆண்டவருக்கு நன்றியுள்ள ஆராதனையை ஏறெடுத்து அவரைப் போற்றித் துதிப்போம்.