ஆசிரியரிடமிருந்து… (செப்டம்பர் – அக்டோபர் 2022)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இராஜாதி இராஜாவாக சீக்கிரம் வரப்போகும் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வருடத்தில் இந்நாள் வரை நம்மை வழிநடத்தி வந்த தேவனை ஸ்தோத்திரிப்போம். இந்த இதழ் அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக இருக்க தேவனிடத்தில் மன்றாடுகிறோம். இத்தியானங்கள் வாயிலாக தங்கள் வாழ்க்கையிலே அநேகர் நல்ல தீர்மானங்களை எடுக்கவும் ஆவிக்குரிய வளர்ச்சி அடைந்து வருவதையும் அறிந்து தேவனைத் துதிக்கிறோம். தியானங்களினாலே ஆசீர்வாத நன்மைகளைப் பெற்றவர்கள் எங்களோடு பகிர்ந்துகொள்ளவும் அநேகருக்கு இவ்விதழை அறிமுகப்படுத்தி வைக்கவும் அன்பாய் வேண்டுகிறோம்.

சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சி வாயிலாகவும் அநேகரை சந்திக்க தேவன் கிருபை செய்துவருகிறார். இந்நிகழ்ச்சிகள் தடைகளின்றி நடைபெறுவதற்கு தொலை காட்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தாங்க அன்பாய் கேட்கிறோம். YouTube Channel இல் இடம்பெற்றுள்ள தியானங்கள் (Audio Version) மற்றும் தெலைகாட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் வாயிலாகவும் ஆசீர்வாதமடைய அழைக்கிறோம்.

சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற செய்திகளடங்கிய புத்தக வெளியீடுகளை மறுபதிப்பு செய்துவருகிறோம். இப்பணிக்கான தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட வேண்டுதல் செய்யவும். தேவன் உங்களை ஏவுவாரானால் மனமுவந்து இப்பணிகளைத் தாங்கவும் அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் செப்டம்பர் மாத தியானங்களை சகோதரி ஜேனட் அவர்கள் எஸ்றா புஸ்தகத்திலிருந்தும், அக்டோபர் மாதத்தில் சகோ.தர்மகுல சிங்கம் அவர்கள் பல்வேறு தலைப்புகளிலும் அநேக ஆவிக்குரிய சத்தியங்களை எழுதியுள்ளார்கள். நம்மை ஜீவ பாதையில் வழிநடத்திச் செல்ல இத்தியானங்கள் அதிக ஆசீர்வாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை எழுதுகிற தேவ பிள்ளைகளுக்காக ஜெபிக்க மறவாதீர்கள். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தேவன் அவர்களை ஆசீர்வாதமாக உபயோகிக்க நல்ல சுகம் பெலன் ஆரோக்கியத்தைத் தந்து, காத்து வழிநடத்தவும் வேண்டுதல் செய்வோம்.

கே.ப.ஆபிரகாம்