ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 30 வெள்ளி

நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறு உத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர் (சங்.138:3) இவ்வாக்கைப் போலவே இம்மாதத்திலே கர்த்தர் நம்முடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டு, நம்முடைய சரீர பிரகாரமான, ஆவிக்குரிய எல்லா நன்மைகளாலும் நிறைத்து வழிநடத்தினார். முழு உள்ளத்தோடு கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார் (மத்தேயு 6:6).