ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 30 ஞாயிறு

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம் (வெளிப்படு.11:17) இம்மாதத்தின் கடைசி ஆராதனை நாளிலும் வட இந்தியா மற்றும் ஆலயங்களே இல்லாத இடங்களில் ஆலயம் கட்டப்படும்படியாய் எடுக்கப்படும் சகல முயற்சிகளையும் கர்த்தர் வாய்க்கச்செய்து, கட்டுமான பணிகள் யாவும் தடைகளின்றி நடப்பதற்கும் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.