ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 30 ஞாயிறு
இம்மாதம் முழுவதும் நம்மை வழுவாதபடி காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம். நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார் (சங்.34:4) என்று தேவனை மகிமைப்படுத்தி நன்றி செலுத்தி குடும்பமாக ஆராதனையில் பங்கெடுப்போம்.
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலி.4:6,7).