ஆசிரியரிடமிருந்து…

(செப்டம்பர்-அக்டோபர் 2013)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

விலையேறப்பெற்ற திரு இரத்தத்தினால் நம்மை மீட்டெடுத்த அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் கடந்த இதழில் இடம்பெற்ற மிஷனரிகளின் வாழ்க்கையைக் குறித்ததான தியானங்கள் வாசகர்களுக்கு அதிக பிரயோஜனமாயிருந்ததை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். தற்போது சத்தியவசன இணைய தளத்திலும் இத்தியானங்கள் தினமும் இடம்பெறுகிறது. இதன் மூலமும் அநேகர் பிரயோஜனமடைந்து வருகின்றனர். உங்கள் ஆவிக்குரிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சபை விசுவாசிகளுக்கும் இத்தியானநூலை அறிமுகப்படுத்த அன்பாய் கேட்கிறோம்.

சத்தியவசன வானொலி, தொலைகாட்சி, இலக்கியம் ஆகியவற்றின் வாயிலாக போதிக்கப்படும் வேதாகம சத்தியங்கள் மூலமாக இன்னும் அநேகர் பிரயோஜனமடையவும், இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்ய அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஆதரவாளர்கள் திட்டத்தில் இணைந்து இவ்வூழியங்களைத் தாங்குகிற அன்பர்களுக்காக தேவனைத் துதிக்கிறோம்.

டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய “இயேசு உங்களை விசாரிக்கிறவர்” என்ற புத்தக வெளியீடு அச்சுப்பணியில் உள்ளது. கூடிய விரைவில் பங்காளர்களுக்கு அதை அனுப்பி வைப்போம்.

சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதிய தியானங்களை செப்டம்பர் மாதத்திலும், சகோதரர் தர்மகுலசிங்கம் அவர்கள் எழுதியுள்ள தியானங்களை அக்டோபர் மாதத்திற்கும் தொகுத்து தந்துள்ளோம். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாயிருக்கும்படி வேண்டுதல் செய்கிறோம். தியானங்களை எழுதுகிற தேவனுடைய பிள்ளைகளை உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்