வாசகர்கள் பேசுகிறார்கள்
(ஜனவரி-பிப்ரவரி 2014)
1. தங்களது தமிழன் டிவி நிகழ்ச்சி மிக ஆசீர்வாதமாக உள்ளது. சுசி பிரபாகரதாஸ், பாகவதர்.வேதநாயகம் சாஸ்திரியார், Prof.எடிசன், Dr.புஷ்பராஜ் இவர்களது செய்திகள் பாடல்கள் என் உள்ளத்தை அதிகமாகத் தொட்டது. ஊழியங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறோம். நன்றி
Mr.S.D.John Thangaiah, Tirupur
2. ஒவ்வொரு மாத அனுதினமும் கிறிஸ்துவுடன் தின தியானங்களும் என் உள்ளத்தை ஊடுருவித் தொடுகின்றன. உன்னதர் இயேசுவுடன் உறவாடச் செய்கின்றன. வேதத்தின்படி வாழ என்னை ஊக்குவிக்கின்றன. எனக்காக ஜெபியுங்கள்.
Mr.J.M.Chinnapparaj, Rajapalayam
3. திங்கள், செவ்வாய் காலை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு பயன் பெறுகிறேன். செவ்வாய்கிழமையில் அந்திரேயா, அந்தரங்க மறைமுக சீஷன் பற்றிக் கூறியது நல்லதாக இருந்தது. (1) பேதுருவை அழைத்து வந்தான். (2) சிறுவனை அழைத்து வந்தான். (3) புறஜாதியானை அழைத்து வந்தான். சத்தியவசனம் நேயர் கடிதம் சிறப்பாக இருக்கிறது. தங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.
Mr.M.Edison Manova, Vellore
4. Dear Sir, We do appreciate the Magazine and the Daily Readings that you send us and also listen to the Messages over the television. Bro.Susi Prabhakaradass delivers his messages with such clarity and they’re so useful to us. God bless your Ministry.
Mr.Edwin, Chennai
5. சகோதரி.தர்ஷினி சேவியர், சகோ.தர்மகுலசிங்கம், சகோதரி.சாந்தி பொன்னு இவர்கள் எழுதும் தியானங்கள், எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வேதாகம புதிர் கேள்விகள் வேதத்தை ஆழ்ந்து படிக்க, சிந்திக்க வைக்கிறது. அனைவருக்கும் எங்கள் நன்றி. ஊழியத்திற்காக தினமும் ஜெபிக்கிறோம்.
Mrs.Leela Bai, Madurai
6. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகமும், சத்தியவசனம் சஞ்சிகையும் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது. தமிழன் டிவியில் வரும் செய்தியின் மூலமாகவும் பயனடைகிறோம். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.
Mr.Marjorie Kingsley, Chennai
7. தங்களது ஆறுதல் கடிதம், அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் சஞ்சிகை மற்றும் TV செய்திகள் எனக்கு மிகவும் ஆறுதலாகவும் ஊன்றக் கட்டுவதாகவும் உள்ளன. நான் ஊழியத்திற்காக அனுதினமும் ஜெபிக்கிறேன்.
Mr.J.Raja Sekaren, Trichy
8. எனது வேலையில் எண்ணற்ற இன்னல்கள், துன்பங்கள் வந்தபோதும் அதைத் தாங்க பெலனும் தந்து கர்த்தர் அற்புதமாக என்னை வழிநடத்தி வருகிறார். எவ்வளவு வேலை இருந்தாலும், அனுதினமும் கிறிஸ்துவுடன் காலை எழுந்ததும் படித்துவிட தேவன் உதவிசெய்கிறார். அதன்மூலம் ஆலோசனைகளும், வழிநடத்துதலும் கிடைக்கிறது. வேதத்தைக் கிரமமாக வாசிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.
Mr.Babu Muthuramalingam, Pappi Rettipatti