ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 18 செவ்வாய்

“குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா.8:36) என்ற வாக்குப்படி நாகலாந்து மாநிலத்தில் பாவத்திலும் சாபத்திலுமுள்ள மக்கள் விடுவிக்கப்படவும், ஒன்றான மெய்தேவனாகிய இயேசுவையே அவர்கள் இரட்சகராக அறிந்துகொள்ளவும், சபை வளர்ச்சிக்கு தடைபண்ணுகிற பொல்லாத சத்துருக்களின் கிரியைகள் அழிக்கப்பட ஜெபம் செய்வோம்.